சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித்தலைவர் சஜிம் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபாநாயகரின் தனிப்பட்ட வீட்டில் இன்று (26) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இதன்போது, விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

