இறக்குமதி செய்யப்படும் 8 புதிய ரயில் பெட்டிகள்!

229 0

ரயில்சேவையை மேலும் தரம் உயர்த்துவதற்கு அடுத்த மாதம் எட்டு பவர் செட் ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி சீனாவிலிருந்து ஆறு புதிய பெட்டிகளும், இந்தியாவிலிருந்து இரண்டு பெட்டிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், ஒரு பெட்டியின் பெறுமதி 10.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அதிநவீன எஸ் -14 பவர் செட்டில் இரண்டு என்ஜின்கள் உள்ளன. இது இரண்டு குளிரூட்டப்பட்ட பெட்டிகளையும், இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும், மூன்று மூன்றாம் வகுப்பு பெட்டிகளையும் கொண்டுள்ளது. ஒரு சாப்பாட்டு பெட்டியும் உள்ளது.

இவை மலையகத்தில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.