இனியும்
இது எங்கள் தேசமென்று
பெருங்கனவு காண வேண்டாம் சிறு இனமே.
.
புதிய பௌத்த கொடியும்,
சிங்கள மொழி தேசிய கீதமும்,
அவர்களுக்குரியதென்று அங்கிகரித்துள்ளார்கள் .
.
இனி எப்போதும்
அவர்கள் எங்களை துரோகி என அழைப்பார்கள்
மௌனித்து வாழப் பழகிக் கொள்வோம்.
.
உங்கள் வீட்டின்
ஒவ்வொரு விடியலும்
ஏதொரு சஞ்சலத்துடன்விடியப் போகிறது
மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்.
.
உங்களுடைய
கோவில்களிலும்,
தேவாலயங்களிலும்
பூசையின் மணியோசை
கேட்பதற்கும் கூட தடை செய்யப்படலாம் ?
அதன்
பின் மதநூல்களும் அழிக்கப்படலாம்?
.
அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளன.
கைதிகளும்,
கொலைகளும்,
எரிப்புக்களும்,
சித்தரவதைகளும்
எங்கள்
மீது மேலும் மேலும் அதிகரிக்க கூடும்?
.
நாங்கள் அவர்களுக்கு
வஞ்சிக்கப்பட்ட மனித குலத்து ஆன்மாக்கள்.
நம்மிடம்
அவர்களுக்கு முன் எஞ்சியிருப்பது
அழுகை தவிர வேறொன்றுமில்லை?
.
கோ. நாதன்.