இரத்தினபுரி குருவிட்ட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தருசிக்க திலங்க என்ற மாணவன் உலங்கு வாநூர்தி ஒன்றை தயாரித்துள்ளான்.
இந்த வித்தியாலயத்தில் நடைபெறும் தொழில்நுட்ப தினத்திற்கு அமைவாக இடம்பெறும் கண்காட்சியை முன்னிட்டு இதனை தயாரித்துள்ளான்.
தமது தந்தையின் தொழிற்சாலையில் இருந்து அகற்றப்படும் பொருட்களை பயன்படுத்தி 11 நாட்களில் இந்த உலங்கு வாநூர்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 250,000 ரூபா செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த உலங்கு வாநூர்தி ஒரு நபர் பயணிக்கக்கூடிய வகையிலும், 7 அடி உயரத்தைக் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த உலங்கு வாநூர்தி பறப்பதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவார்களாயின் இதனை முழுமைப்படுத்த முடியும் என்று உலங்கு வாநூர்தியை தயாரித்த மாணவன் தெரிவித்துள்ளான்.

