இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் 25 ஆம் திகதி

335 0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான 15 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வினைத் தொடர்ந்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.