எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்லில் பெற்ற முன்னேற்றம் மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட மேலும் சில பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.