மக்களுக்கு நன்றி கூறிய சஜித்

200 0

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாச தனது ஆதரவாளர்களையும் பொது மக்களையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பு வொக்ஷால் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது தனக்கு தேர்தல் காலத்தில் வழங்கிய உதவிக்கும் வாக்களித்தமைக்காகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது தேர்தல் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த தேர்தலில்  அதிகூடிய வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.