தமிழர்களின் உரிமைக்காக தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் மற்றும் திருகோண மலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கிழக்கிலுள்ள 3 மாவட்டங்களிலும் மாவீரர் நினைவேந்தல் வாரம் இம்முறை உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றது.
இதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பொதுமக்களால் துப்புரவு செய்யப்பட்டடு வருகின்றன.