வாக்காளர் இடாப்பு குறித்து 70, 000 மேன்முறையீடுகள்

170 0

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு குறித்து 70, 000 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மேன்முறையீடுகள் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளாார்.

மாவட்டத் தேர்தல் அலுவலகங்களின் ஊடாக இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டுகான தேர்தல் இடாப்பு அடுத்த மாதம் 31 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.