காலி, வதுரம்ப மெதகீஒய பகுதியில் ஏற்பட்ட டொனேடோ சூறாவளி காரணமாக 20 குடும்பங்களை சேர்ந்த 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பயிர் நிலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அனர்த்தம் காரணமாக பாரிய மரங்களும் சரிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.