யார் இந்த கோத்தாபய?

291 0

இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது நிறை­வேற்­ற­தி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் கள­மி­றங்­கிய நந்­த­சேன கோத்தாபய ராஜ­ப­க்ஷ வெற்­றி­யீட்­டி­ருப்­ப­துடன், இன்­றைய தினம் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொள்­ள­வி­ருக்­கிறார்.

கோத்தாபய ராஜ­ப­க்ஷ டி.ஏ.ராஜ­ப­க்ஷ மற்றும் டந்­தினா ராஜ­ப­க்ஷ ஆகி­யோரின் மக­னாக 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி வீர­கெட்­டி­யவில் பிறந்தார்.

தனது பாட­சாலைக் கல்­வியை ஆனந்தா கல்­லூ­ரியில் பெற்­றுக்­கொண்ட கோத்த­பாய ராஜ­ப­க்ஷ கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் தகவல் தொழில்­நுட்­பத்தில் பட்­டப்­ப­டிப்பை நிறை­வு­செய்தார்.

அனோமா ராஜ­ப­க்ஷவை திரு­மணம் செய்து கொண்­ட­துடன், அவர்­க­ளுக்கு மனோஜ் என்ற மக­னொ­ருவர் உள்ளார்.

இலங்கை இரா­ணு­வத்தில் கடட் அதி­கா­ரி­யாக 1971ஆம் ஆண்டில் இணைந்­து­கொண்ட கோத்தாபய ராஜ­ப­க்ஷ, லெப்­டினன் கேணல் தரம் வரை உயர்த்­தப்­பட்டு 20 வரு­ட­காலம் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றினார்.

1992 ஆம் ஆண்டில் இரா­ணு­வத்­தி­லி­ருந்து ஓய்­வு­பெற்று அமெ­ரிக்­கா­வுக்குச் சென்று அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் வசித்­து­வந்தார்.

பின்னர்  2005ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்­கத்தில் பாது­காப்புச் செய­லா­ள­ராகப் பொறுப்­பேற்­றுக்­கொண்டு 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி வரை அப்­ப­த­வியை வகித்தார்.

இந்­நி­லையில் இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் ஏழா­வது நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­கான எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் கோத்­த­பாய ராஜப­க்ஷ வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்கப்­பட்டார்.

அவர் நேற்று முன்தினம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி, இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.