வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு : சஜித் அமோக வெற்றி

195 0

வன்னி மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவின் படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெற்று முன்னிலையிலுள்ளார்.

 

வன்னி மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 174739 வாக்குகளைப்பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 26 105 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்திலுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் 212778 செல்லுபடியாகும் வாக்குகளும் 216072 அளிக்கப்பட்ட வாக்குகளும் 3294 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.