நெடுந்தீவு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது

290 0

tamilnaduநெடுந்தீவு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட  இந்திய மீனவர்கள் நால்வர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு,  புதுக்கோட்டை, ஜெகதாளபட்டணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ ர்களிடமிருந்து விசைப்படகு ஒன்றும், எட்டு மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்ப ட்டவர்கள் இன்று முற்பகல் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இம் மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றுகாலை  ஆஜர்படுத்தப்பட்டநிலையில் 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.