இரத்தினபுரி பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து கேரள கஞ்சா 5 கிலோ 200 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி, மாரப்பன பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

