மூடப்­பட்­டுள்ள தேயிலைத் தொழிற்­சா­லை­கள் மீண்டும் திறக்கப்படும் – சஜித்

284 0

தேயிலை உற்­பத்­தி­யை மேம்படுத்­தவும் கம்­பளைப் பிர­தே­சத்தில் மூடப்­பட்­டுள்ள தேயிலைத் தொழிற்­சா­லை­களைத் திறக்­கவும் ஆவன செய்­வ­தோடு தோட்டத் தொழி­லா­ளர்­களை சிறுதேயிலைத் தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக மாற்­றுவேன் என்று புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச கூறினார்.

கம்­பளை தனியார் பஸ் நிலை­யத்தில் இடம்பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்துகொண்டு பேசும்­போதே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்து அவர் பேசு­கையில், நான் ஜனா­தி­ப­தி­யா­னதும் தேயிலைத் தொழிற்­து­றையை முன்­னேற்­ற­ம­டையச் செய்­வ­தோடு தற்­பொ­ழுது மூடப்­பட்­டி­ருக்கும் தேயிலைத் தொழிற்­சா­லை­களைத் திறப்­ப­தற்கும் ஆவன செய்வேன்.

காலம் கால­மாக தொழி­லா­ளர்­க­ளா­கவே வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக மாற்றுவதற்­கான சந்­தர்ப்­பங்­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்பேன்.   இதே­வேளை தோட்டத்  தொழி­லாளர்­களின் சம்­ப­ளத்­தை 750 ரூபா அல்ல 1500 ரூபா­வாக அதி­க­ரிக்க நட­வ­டிக்­கை­யை  மேற்­கொள்வேன்  என்­ப­தை மீண்டும் கூறிக்கொள்­கின்றேன்.

எமது நாட்டில் அனைத்து தொழில்துறைகளுக்கும் அரச திணைக்­க­ளங்கள் உள்­ளன. ஆனால் கோப்பி, மிளகு, கராம்பு உட்­பட   வாசனைத் திர­வி­யங்களின் செய்­கை­யா­ளர்­க­ளுக்கு அந்த வாய்ப்பு இல்­லாமல் உள்­ளது. நான் ஜனா­தி­ப­தி­யா­னதும் மேற்­கு­றிப்­பிட்ட துறைக்­கென தனி­யான ஒரு திணைக்­க­ளத்­தை அமைத்துக் கொடுத்து அத்­தொழில் துறை­யையும் முன்­னேற்­ற­ம­டையச் செய்வேன்.

பால் உற்­பத்­தி­யா­ளர்­களும் தற்­பொ­ழுது பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றனர். அவர்­களின் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்து நாட்டில் பால் உற்­பத்­தி­யை தன்­னி­றைவு அடையச் செய்வேன். எனது தந்தையின் காலத்­தி­லேயே பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான  பகல் உணவு வழங்கும் திட்டம் அமுல்படுத்­தப்­பட்­டது.

ஆனால் அதனை எதி­ர­ணி­யி­னரே இல்­லாமல் ஆக்கினர். நான் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை அமுல்படுத்துவேன்.  கண்டிக்கு முந்திய இராஜதானிய நகரான கம்பளை நகரத்தை அபிவிருத்தி செய்து நாட்டின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றியமைப்பேன் என்றார்.