துட்டகைமுனுவின் சகோதரருக்கோ, தந்தையின் புதல்வருக்கோ முடியாது- அநுர குமார

307 0

நாட்டை அபிவிருத்தி செய்வது என்பது தனிநபர் ஒருவரின் பணியல்லவென தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சிலாபம் பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

2010 ஆம் ஆண்டு துட்டகைமுனுவென மஹிந்த ராஜபக்ஸவைக் கொண்டுவந்து நாட்டைக் கட்டியெழுப்ப இந்த நாட்டு மக்கள் முயற்சித்தனர். அது முடியாமல் போனது. கடந்த 2015 ஆம் ஆண்டில் மீண்டும் பொலன்னறுவை மைத்திரியைக் கொண்டுவந்து செய்யப் பார்த்தனர் அதுவும் முடியாமல் போயுள்ளது.

தற்பொழுது துட்டகைமுனுவின் சகோதரரைக் கொண்டு வந்து இதனைக் சாதிக்க முயற்சிக்கின்றனர் சிலர். இன்னும் சிலர் தந்தையின் புதன்வரைக் கொண்டு சாதிக்கலாம் என நினைக்கின்றனர். இவை எதுவும் வரலாற்றில் சாத்தியப்படாமலேயே போயுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.