தவ­றான அர­சியல் பாதையில் சந்­தி­ரிகா, குமார வெல்­கம -கெஹெ­லிய

352 0

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ ம­தா­ச­விற்கு  ஆத­ரவு வழங்­கு­வதால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி  பாது­காக்­கப்­ப­டாது.  முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க,  மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  குமார வெல்­கம ஆகியோர்  தவ­றான அர­சியல் நிலைப்­பாட்டை தற்­போது கொண்­டுள்­ளார்கள் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல  தெரி­வித்தார்.

வியத்­மக அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ நிச்­சயம் வெற்றி பெறுவார். தேர்தல் பெறு­பேறு  தமக்கு எதி­ராக அமையும் என்­பது அறிந்து   தற்­போது ஐக்­கிய தேசிய கட்சி போலி­யான  குற்­றச்­சாட்­டுக்­களை முன்­னி­லைப்­படுத்தி தேர்தல் பிரசா­ரங்­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில்  தேர்தல் ஆணைக்­கு­ழுவில்   முறைப்­பாட்டை செய்­துள்ளோம்.

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவை தேர்தல் கள விவா­தத்­துக்கு ஆளும் தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச அழைத்­துள்­ளமை நகைப்­புக்­கு­ரி­யது. எவ்­வித தேர்தல்  மற்றும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திகள் அல்­லாத ஒரு தரப்­பி­ன­ருடன் விவாதத்­தினை முன்­னெ­டுப்­பது பய­னற்­றது. முறை­யாக கொள்கைத் திட்­டங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொது­ஜன பெர­முன தேர்தல் பிர­சா­ரங்­களை நாடு தழு­விய ரீரி­தியில் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­துள்­ள­மை­யினால் அக்­கட்­சியின் தனித்­துவம் பாதிக்­கப்­படும் என்று   சுதந்­திரக் கட்­சியின் ஒரு தரப்­பினர் சுய­நல கருத்­துக்­களை குறிப்­பிட்டுக் கொள்­கின்­றார்கள்.  ஆளும் தரப்பின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ரவு  வழங்­கு­வதா  சுதந்­திர கட்­சியை பாது­காக்கும் அமைப்பின் கொள்கை என்ற கேள்வி இங்கு தோற்றம் பெறு­கின்­றது.

முன்னாள்  ஜனா­தி­பதி சந்­தி­ரிகா  பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம ஆகியோர்   தற்­போது அர­சியல் ரீதியில் தவ­றான  நிலைப்­பாட்­டினை கொண்­டுள்­ளார்கள். சுதந்­திர கட்சி ஐக்­கிய தேசிய  கட்­சி­யுடன் கூட்­ட­ணி­ய­மைத்து தேசிய அர­சாங்­கத்­தினை தோற்­று­வித்­த­தா­லேயே சுதந்­திர கட்சி அர­சியல் ரீதியில் பல­வீ­ன­ம­டைந் தது.  சுதந்­திர கட்­சியை பாது­காக்க வேண்­டிய பொறுப்பு எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கும் காணப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே இரு தரப்­பி­னரும் கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஒன்­றி­ணைந்­துள்ளோம்.

பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் கொள்கை பிர­க­ட­னத்தில் நட்­பு­ற­வு­ட­னான வெளி­நாட்டு கொள்­கைக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச   நாடு­களின் அங்­கீகாரம் இல்­லாமல் ஒரு­போதும் தனித்து செயற்பட முடியாது.  இதற்காக நாட்டின் இறையாண்மையி னையும் விட்டுக்கொடுக்க முடியாது. நாட் டுக்கு  பாதகமாக இதுவரையில்  செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத் தும் மீள்பரிசீலனை செய்யப்படும்.  இறை யாண்மைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் முழுமையாக நிராகரிக்கப் படும்  என்றார்.