ஆளுனர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக்கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்துள்ளது.
வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுனர்கள் பெருமளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கு பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலைத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரான பிரச்சார நவடிக்கைகளின் போது இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கஜநாயக்கவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

