பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகம்- மஹிந்த அமரவீர

444 0

download-1பருத்தித்துறைக்கு அருகாமையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக கடற்றொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மீனவர்களுக்காக இலவசமாக 150 வள்ளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில் கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கடற்றொழில் சமூகத்தினருக்கு இவ்வாறான நிவாரணம் 20 வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அத்தோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள கடற்றொழில் சமூகத்தினருக்கும் தேவையான வசதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது