யாழிலிருந்து சொகுசு காரில் கொழும்பு போன கஞ்சா வவுனியாவில் சிக்கியது

308 0

 

imagesவவுனியா, ஏ-9 வீதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று அதிகலை 4.30 மணியளவில் ஏ-9 வீதியில் வீதி ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான சொகுசு காரினை சோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த காரில் மறைத்து வைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட 14 கிலோ கேரளா கஞ்சாவினை பொலிஸார் மீட்டனர். இதன் மொத்தப் பெறுமதி 17 இலட்சம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் காரினை செலுத்திய நபர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.