கிளிநொச்சியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

201 0

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஜீப் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அந்த வாகனம் பயணித்தபோது வழி மறித்துள்ளனர்.

எனினும் பொலிஸாரின் அறிவுறுத்தலை கருத்திற்கொள்ளாமல் வாகனம் பயணித்தமையினால், வாகனத்தை துரத்திச் சென்ற பொலிஸார் ஒரு கட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் குறித்த வாகனமானது காலால் திணைக்களத்துக்கு சொந்தமானது எனவும், அந்த வாகனத்தில் காலால் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.