‘யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர், ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

174 0

யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று (12) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஆளுநர் குறிப்பிடுகையில்,

இந்த அபிவிருத்தி திட்டமானது போருக்கு பின்னரான பாரிய முன்னேற்றகரமான விடயமாகும் . புலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ் மண்ணில் வந்து தமது உறவுகளை இலகுவாக சந்திப்பதற்கான வழியாக இது அமைகின்றது.

இந்த விமான போக்குவரத்தின் போது தற்போது தமிழ்நாட்டிற்கான 7 விமான சேவைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை வாரத்திற்கு 12 விமான சேவைகளாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.