தேர்தலுனுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் 11 திகதி மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் 11 ஆம் திகதி மாத்திரம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் வன்செயல்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 45 முறைப்பாடுகளும், 4 வேறு முறைப்பாடுகளும் மொத்தமாக 53 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேபோன்று மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் சட்ட மீறல்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதற்கமைய இது வரையில் தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 360 முறைப்பாடுகளும், 6 வேறு முறைப்பாடுகளும் மொத்தமாக 375 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.