எல்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகமான பகுதி-சுஜீவ

226 0
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தோல்வியை தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக முனைப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க இதனை தெரிவித்திருந்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் இதே போன்ற வெற்றியை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்த போதும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியை சந்தித்தாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் எல்பிட்டிய, ஐக்கிய தேசிய கட்சிக்கு பாதகமான ஒரு பகுதியாகவே காணப்படுவதாக சுஜீவ சேனசிங்க தெரிவித்திருந்தார்.