ஜனாதிபதி தேர்தல் வன்முறைகள்: 269 முறைப்பாடுகள் பதிவு

305 0

தேர்தலுனுடன் தொடர்புடைய வன்செயல்கள் மற்றும் சட்ட மீறல்கள் குறித்து கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4.30 மணி வரை நாடளாவிய ரீதியில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் 10 ஆம் திகதி மாத்திரம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் வன்செயல்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள்  தொடர்பில் 66 முறைப்பாடுகளும், வேறு இரு முறைப்பாடுகளும் மொத்தமாக 70 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதே போன்று மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் சட்ட மீறல்கள் தொடர்பில் 43 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய இது வரையில் தேர்தல் வன்செயல்கள் தொடர்பில் 5 முறைப்பாடுகளும், சட்ட மீறல்கள் தொடர்பில் 262 முறைப்பாடுகளும், வேறு இரு முறைப்பாடுகளும் மொத்தமாக 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.