இலங்கை பொறியியல் நிறுவனத்தின் ஊடாக மாலைத்தீவுக்கான சிங்கப்பூர் விமான சேவை உறுதி

279 0

இலங்கை பொறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.

இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மாலைதீவிற்கான சேவையில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

நாம் இந்த தொழிற்துறையில் உயர்மட்ட செயற்பாடுகளை எப்பொழுதும் முன்னெடுத்து வருகின்றோம். 3ஆம் தரப்பினர் முன்னெடுக்கும் சேவைகளை உறுதி செய்வதற்கு எதிர்வரும் வருடங்களில் நாம் எதிர்பார்த்துள்ளோம் எனவும் இலங்கை பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு உட்பட்ட SIA Aviation company Trining academy  என்ற நிறுவனத்தினால் இலங்கை பொறியியலாளர்கள், அதாவது மாலைதீவில் விமான சேவையில் ஈடுபட்டுவரும் பொறியியலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணத்திலக்க தெரிவித்துள்ளார்.