இலங்­கை­யு­ட­னான இரு­ த­ரப்பு உற­வுக்கு சிறந்த அடித்­த­ள­மி­டப்­பட்­டுள்­ளது – ஐக்கிய இராச்சியம்

280 0

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வுடன் மேற்­கொண்ட அர­சியல் ரீதி­யான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­படி இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­திற்குக் கொண்டு செல்­வ­தற்­கான சிறந்த அடித்­தளம் இருப்­பது தெளி­வா­கி­யி­ருப்­ப­தாக ஐக்­கிய இராச்­சி­யத்தின் பொது­ந­ல­வாய, ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் தெற்­கா­சிய விவ­கார அமைச்சர் தாரிக் அஹமத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அண்­மையில் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்த ஐக்­கிய இராச்­சி­யத்தின் பொது­ந­ல­வாய, ஐக்­கிய நாடுகள் சபை மற்றும் தெற்­கா­சிய விவ­கார அமைச்­சரும், முரண்­பா­டுகள் உள்ள இடங்­களில் பாலியல் வன்­மு­றை­களைத் தடுப்­ப­தற்­கு­மான பிர­த­மரின் விசேட பிர­தி­நி­தி­யு­மான தாரிக் அஹமத், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­களை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் தனது இலங்கை விஜயம் குறித்து காணொளி ஒன்றில் பேசி­யி­ருக்கும் தாரிக் அஹமத் மேலும் கூறி­யி­ருப்­ப­தா­வது: இலங்­கைக்கும், ஐக்­கிய இராச்­சி­யத்­திற்கும் இடையில் மிக நீண்­ட­கா­ல­மாக வலு­வான நட்­பு­ற­வொன்று இருந்­து­வ­ரு­கி­றது. பெரு­ம­ள­வான புலம்­பெயர் தமி­ழர்கள் ஐக்­கிய இராச்­சி­யத்தில் வசிக்­கின்றனர். வர்த்­தக மேம்­பாடு, பொது­வான சுபீட்சம் என்­பன­வற்றை நோக்­காகக் கொண்டு இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பு மேலும் பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அதே­போன்று இலங்­கையில் குறித்­த­வொரு சமூ­கத்தை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­கு­தல்கள் பாது­காப்­புத்­துறை சார்ந்த ஒத்­து­ழைப்­புக்­களும் விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்­டிய தேவையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. அத்­தோடு மனித உரிமை விவ­கா­ரங்­க­ளிலும் முக்­கிய அவ­தானம் செலுத்­தப்­பட வேண்டும். இலங்­கைக்கும், ஐக்­கிய இராச்­சி­யத்­திற்கும் இடை­யி­லான நட்­பு­றவைப் பொறுத்­த­வரை அதற்கு ஒரு வலு­வான அடிப்­படை உள்­ளது. அதனை மைய­மா­கக்­கொண்டு இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்த முடியும்.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் மேற்கொண்ட அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளின் பிரகாரம், இருநாட்டு உறவையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான சிறந்த அடித்தளம் காணப்படுகின்றமை தெளிவாகியிருக்கிறது.