நீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும்

306 0

எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் நிறை­வ­டைந்­துள்­ளது. பிர­தான அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் உட்­பட 35 பேர் வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்து தேர்தல் களத்தில் குதித்­துள்­ளனர்.  41 பேர் கட்­டுப்­ப­ணத்தை செலுத்­தி­யி­ருந்­த­போ­திலும் 35 வேட்­பா­ளர்­களே வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர்.

அடுத்த மாதம் 16ஆம் திகதி ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. இதற்கு இடைப்­பட்ட காலத்தில் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முஸ்­­தீ­பு­களில் பிர­தான அர­சியல் கட்­சிகள் ஈடு­பட்­டுள்­ளன. இதற்­கான நிகழ்ச்சி நிரல்­களும் தயா­ரிக்­கப்­பட்டு பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கான ஏற்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்தத் தேர்­தலில் 5 சிறு­பான்மை இனத்­த­வர்­களும் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர். இவர்­களில்   முன்னாள் கிழக்கு மாகாண ஆளு­நரும் அமைச்­ச­ரு­மான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லா, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்­சியின் தவி­சா­ள­ரு­மான எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஆகியோர் குறிப்­பி­டத்­தக்­க­வர்­க­ளா­க­வுள்­ளனர்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தேர்­தலை நீதி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் நடத்­து­வ­தற்கு சக­லரும் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வேண்­டு­மென்று தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

வேட்­பு­ம­னுக்­களை ஏற்­றுக்­கொண்ட பின்னர் வேட்­பா­ளர்கள் மத்­தியில் கருத்து தெரி­வித்த தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இந்த விட­யங்­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். தேர்­தலை நீதி நியா­ய­மாக நடத்­து­வ­தற்கு சகல வேட்­பா­ளர்­களும் அவர்­க­ளது ஆத­ர­வா­ளர்­களும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். இதே­போன்று ஊட­கங்­களும் நடு­நி­லை­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும் என்றும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் கேட்­டுக்­கொண்­டுள்ளார்.

 

இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களோ அல்­லது அச்சு ஊட­கங்­களோ வேட்­பாளர் ஒரு­வ­ருக்கு ஆத­ர­வா­கவும் மற்­றொரு வேட்­பா­ள­ருக்கு எதி­ரா­கவும் செயற்­படக் கூடாது. சகல வேட்­பா­ளர்­க­ளுக்கும் சம உரிமை அடிப்­ப­டையில் செய்­திகள் வெளி­யி­டப்­பட வேண்டும். சமூக ஊட­கங்­களில் பதி­வேற்றும் விட­யத்­திலும் நடு­நி­லைமை பேணப்­பட வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இத­னை­விட பிர­சாரக் கூட்­டங்­க­ளின்­போது வேட்­பா­ளர்­களும் ஆத­ர­வா­ளர்­களும் செயற்­ப­ட­வேண்­டிய விதம் தொடர்­பிலும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் அர­சியல் கலப்­ப­ட­மின்றி செயற்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யான வாக்­கு­ரி­மையை அவர்கள் பயன்­ப­டுத்தி பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­துக்கு ஏற்ப நாட்டின் தலை­வரை தெரி­வு­செய்­வ­தற்கு சுதந்­தி­ர­மான நீதி­யான தேர்தல் என்­பது அவ­சி­ய­மா­ன­தாகும். வன்­முறை­க­ளற்ற, எதேச்­சா­தி­கா­ரங்­க­ளற்ற வகையில் பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அமை­தி­யான முறையில் தேர்தல் நடத்­தப்­பட்டால் மட்­டுமே பெரும்­பான்மை மக்­களின் விருப்­பத்­துக்கு ஏற்ப நாட்டின் தலை­வரை தெரி­வு­செய்ய முடியும்.

இந்த விட­யத்தில் அர­சியல் தலை­வர்கள், பொது­மக்கள் மற்றும் ஊட­கத்­து­றை­யினர் உட்­பட சகல தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட வேண்டும். பொலிஸார் சகல தரப்­பி­ன­ருக்கும் நடு­நி­லை­மை­யாக செயற்­ப­டுதல் அவ­சி­ய­மா­கின்­றது. கடந்த காலங்­களில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் உட்­பட பல்­வேறு தேர்­தல்­களில் வன்­முறைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டமை வர­லா­றாக உள்­ளது. இத்­த­கைய வன்­முறைக் கலா­சாரம் இனியும் தொட­ரக்­கூடாது.

-2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரு­ம­ளவில் வன்­முறைகள் இடம்­பெ­றாத போதிலும் அச்­சு­றுத்­தல்­களும் அசம்­பா­வி­தங்­களும் இடம்­பெற்று இருந்­தன. அன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ

பக் ஷ தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்கம் பத­வி­யி­லி­ருந்­தது. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் செய­லா­ள­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்தார். இதன்­போது பல்­வேறு அச்­சு­றுத்தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே பொது எதி­ர­ணி­யினர் பிர­சா­ரத்தில் ஈடு­ப­ட­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.

-இறு­திநாள் பிர­சாரம் கொழும்பு மரு­தானை பஞ்­சி­கா­வத்தை பகு­தியில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில் பங்­கேற்­ப­தற்கு பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பாது­காப்­பற்ற நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. இந்­த­நி­லையில் அன்று எதிர்­க் கட்சித் தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பாது­காப்புத் தரப்­பி­ன­ருடன் சென்று வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை இறுதிப் பிர­சா­ரக் கூட்­டத்­துக்கு அழைத்து வந்­தி­ருந்தார். இவ்­வாறு அச்­சு­றுத்­தல்கள் அந்தத் தேர்­தலில் நில­வி­யி­ருந்­தது.

-இதே­போன்றே 2010ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலின்­போதும் பிர­சா­ரங்­க­ளின்­போதும் வன்­மு­றைகள் இடம்­பெற்­றி­ரு­ந்­தன. அச்­சு­றுத்­தல்கள் நில­வி­யி­ருந்­தது. அன்று எதி­ரணி வேட்­பா­ள­ராக முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா போட்­டி­யிட்­டி­ருந்தார். தேர்தல் பிர­சாரக் காலத்தில் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே எதி­ர­ணி­யினர் பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யி­ருந்­தது.

இதற்கு முன்னர் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தல்கள் மற்றும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள், உள்­ளூ­ராட்சித் தேர்­த­லி­க­ளின்­போதும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்­டி­ருந்­தன. மாகாண சபைத் தேர்­தல்கள் தனித்­த­னி­யாக நடத்­தப்­பட்­ட­போதும் கூட அங்கும் பல்­வேறு வன்­மு­றைகள் வெடித்­தி­ருந்­தன. இதனால் உயி­ரி­ழப்­பு­களும் சொத்­தி­ழப்­பு­களும் ஏற்­பட்­டன.

-இத்­த­கைய வன்­முறைக் கலா­சாரம் இனியும் இடம்­பெ­ற­க்­கூ­டாது. வன்­மு­றை­களற்ற வகையில் நீதி நியா­ய­மான தேர்­தலை நடத்­து­வதன் மூலம் மக்­களின் ஜன­நா­யக உரிமையை பாது­காப்­ப­தற்கு அனைத்து தரப்­பி­னரும் ஒத்து­ழைக்க வேண்டும்.  இதற்­கான கோரிக்­கையைத் தான் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய விடுத்­தி­ருக்­கின்றார்.

-பொது­மக்­களும் ஊட­கத்­து­றை­யி­னரும் தனி­த்­து­வ­மாக செயற்­பட்டு நீதி நியாய­மான தேர்­தலை நடத்­த­ுவ­தற்கு ஒத்­து­ழைப்ப­துடன் தேர்­தல் சட்­டங்­க­ளுக்கு முர­ணாக யாரேனும் செயற்­பட்டால் அது­கு­றித்து அறி­யத்­த­ரு­மாறும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் கேட்­டி­ருக்­கின்றார். எனவே நீதி­யான தேர்­தலை நடத்­து­வ­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழு­வுடன் இணைந்து சகல தரப்­பி­னரும் செயற்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாக உள்­ளது.

நாட்டில் வன்­மு­றை­க­ளற்ற தேர்­தல்கள் இடம்­பெற வேண்டும் என்­ப­தற்­கா­கவே தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. விருப்பு வாக்கு முறையின் கார­ண­மா­கவே கட்­சி­க­ளுக்­கி­டை­யேயும் வேட்­பா­ளர்­க­ளுக்­கி­டை­யேயும் முரண்­பா­டுகள் ஏற்­பட்டு வன்­முறைகள் அதி­க­ரித்து வந்­தன. ஒரு கட்­சிக்­குள்­ளேயே விருப்பு வாக்கின் கார­ண­மாக வேட்­பா­ளர்கள் முட்டி மோதும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த முக்­கி­யஸ்­தரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பாரதலக்­ஸ்மன் பிரே­மச்­சந்­திர துப்­பாக்கிச் சூட்டில் பலி­யா­கி­யி­ருந்தார். உள்­ளூ­ராட்சி தேர்தல் வாக்­கெ­டுப்­பின்­போது பாரத லக்ஸ்மன் பிரே­மச்­சந்­திர குழு­வி­ன­ருக்கும் முன்னாள் பாரா­ள­ுமன்ற உறுப்­பி­ன­ர் துமிந்த சில்வா தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மிடையில் ஏற்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் இந்த மரணம் சம்­ப­வித்­தி­ருந்­தது.

-ஒரே கட்­சிக்­குள்­ளேயே குத்­து­வெ­ட்­டு­க­ளுக்கு கார­ண­மாக இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறைமை காணப்­பட்­டது. இத­னால்தான் விருப்பு வாக்கு தேர்தல் முறை­யினை இல்­லா­தொ­ழித்து புதிய தேர்தல் முறை­யினை கொண்­டு­வ­ர­வேண்­டி­ய­தன்­ அ­வ­சியம் உண­ரப்­பட்­டி­ருந்­தது. கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பொது எதி­ர­ணியின் சார்பில் தேர்தல் முறை ­மாற்­றத்­துக்­கான உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

-இதற்­கி­ணங்­கவே உள்­ளூ­ராட்சித் தேர்தல் முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் பின்­னர் மாகாண சபைத் தேர்தல் முறை­மையை மாற்­று­வ­தற்கும் நட­வ­டி­க்கை எடுக்­கப்­பட்­டது. ஆனால் அந்த விடயத்தில் தற்போது இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. உள்ளூராட்சி தேர்தல் புதிய முறையில் இடம்பெற்றிருந்தபோதிலும் அந்த முறைமையிலும் குறைபாடுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளும் எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்ற. விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தல்கள் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்று சிறுபான்மைக் கட்சிகள் கருதுகின்றன.

ஜனநாயக ரீதியில் நீதி நியாயமான தேர்தல்கள் இடம்பெறாமையின் காரணமாகவே தேர்தல் முறை மாற்றம் குறித்து சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவிருக்கின்றது. இந்தத் தேர்தல் நீதி நியாயமாக இடம்பெறுவதற்கு சகல தரப்பினரும்  ஒத்துழைக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் தாம் விரும்பிய  தலைவரை தெரிவு செய்வதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்.

இதேபோன்றே ஏனைய தேர்தல்களை காலதாமதம் இன்றி நடத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஜனநாயகம் நாட்டில் தழைத்தோங்குவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்த விரும்புகின்றோம்.