மின்னல் தாக்குதலுக்கு இலக்கான 2 குழந்தைகளின் தாய் வைத்தியசாலையில் அனுமதி!

202 0

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மறே தோட்ட கெடல்ப் பிரிவில் 3.30 மணியளவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேலையில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான பெண் ஒருவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய 2 குழந்தைகளின் தாயான பி. காந்தரூபி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து அவரை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அம்பியூலன்ஸ் மூலமாக 4.40 மணிக்கு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..