ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளது-லக்ஷமன்

314 0
நாட்டில் நிலவும் ஆர்ப்பாட்டங்களின் ஊடாக நாடு சீர்குலைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாடு இன்று தலைமையற்ற நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளதால் குறித்த போராட்டங்களுக்கு தீர்வு காண முடியாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள் மோட்டார் சைக்கிளை எம்மிடம் இருந்து பெற்றுவிட்டு அடுத்த பக்கத்திற்கு வாக்களித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் இப்போது பாரிய விளைவை செய்து விட்டதை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.