உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி(காணொளி)

315 0

students-anchaliசுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 64 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று ஆரம்பமானபோது, கடந்த 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 21ஆம் திகதி கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 3 ஆம் வருடத்தில் கல்வி கற்ற, கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஸன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.