சட்டவிரோத தங்க நாணயங்களுடன் இருவர் கைது

194 0

போலியான சட்டவிரோத தங்க நாணய தொகைகளுடன் இரு சந்தேக நபர்கள் பெஹலியகொட பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தங்க நாணயங்களை காண்பித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 4 தங்க நாணயங்கள் மற்றும் பித்தளையினால் ஆன 1400 போலியான சட்டவிரோத தங்க நாணயங்களுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.