நாட்டை விட்டு தப்பிச் சென்றார் அர்ஜூன் மகேந்திரன்!

343 0

83116_arjuna-mahendran-chief-investment-officer-emirates-nbd-wealth-managementமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் சற்றுமுன் கோப்குழு அறிக்கைக்குப் பயந்து நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

கோப்குழு தொடர்பான இறுதி அறிக்கை நாளை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் இதற்கு பயந்து அவர் தற்சமயம் நாட்டை விட்டே தப்பிச் சென்றுள்ளதாக ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.