‘ஆவா குறூப்’ மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவாலேயே உருவாக்கப்பட்டது!

325 0

3866ebfc0ed13e7174e7e960b0f8daec_xlஉந்துருளிகளில் சென்று கொள்ளைகளில் ஈடுபடும் ஆவா குறூப் என அழைக்கப்படும் கொலைசெய்யும் கும்பலை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கின் பாதுகாப்புப் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த கத்துருசிங்கவால் மிகவும் இரகசியமான முறையில் வடக்கில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பல்கலைக்கழக மாணவர்களும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளின்போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவா குறூப் ஆனது யுத்தம் நிறைவடைந்தபின்னர் மன்னாரில் உருவாக்கப்பட்டது. இருப்பினும், இது தொடர்பான எந்தவொரு தகவலையும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆவா குழு போன்று இயங்கும் ஏனைய கொலை செய்யும் குழுக்களும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் விசேடமாக வடக்கில் செயற்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டவையே. தென்னிந்திய சினிமாப்பாணியில், வாள்கள், கிறிஸ் கத்திகள் ஏந்தியவண்ணம் உந்துருளிகளில் வந்து இந்தக் குண்டர்கள் தாக்குதலை நடாத்துகின்றனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 2013ஆம் ஆண்டு, இந்தக் குழு கொக்காவிலில் காவல்துறையினர் ஒருவரை கிறிஸ் கத்தியால் வெட்டியுள்ளது. ஆனால், விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்தக் குழு இயங்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.