இனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி-சந்திம

201 0

இனங்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் காலத்திற்கு காலம் பல்வேறு எதிர்ப்பார்ப்புக்களை வழங்கி பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும், அவரச கால சட்டத்தினை ரத்துச் செய்யதன் ஊடாக புர்க்கா சட்டபூர்வமானதா என்ற பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீண்டும் மக்களுக்கிடையில் விரோதத்தை ஏற்படுத்தி நாட்டினுள் மீண்டும் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது.

சட்டத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயற்சிப்பதாக சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்தார்