சஜித்தை வேட்பாளராக்கக்கோரி பௌத்த பிக்குகள் பேரணி

276 0

ஐக்­கிய தேசிய கட்­சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்கக் கோரி அகில இலங்கை பிக்­குமார் முன் ­னணி பேர­ணி­யாகச் சென்று  அல­ரி­மா­ளி­கையில்  மக­ஜ­ரொன்றை  கைய­ளித்­துள்­ளது.

நேற்று வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல்  கொழும்பு – விஹா­ர­மகா தேவி பூங்­காவில்  ஒன்­று­கூ­டிய பெளத்த பிக்­குமார் விஷேட வழி­பா­டு­களில் ஈடு­பட்­ட­துடன் அங்­கி­ருந்து பேர­ணி­யாக அல­ரி­மா­ளிகை நோக்கி சென்­றனர். இந்த பேர­ணியில் நூற்­றுக்­கு­மேற்­பட்ட பௌத்த பிக்­குக்கள்  கலந்­து­கொண்­டனர்.  பேர­ணி­யாகச் சென்ற இவர்கள் அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் அலு­வ­லக அதி­கா­ரி­க­ளிடம் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும் என்று கோரும் மக­ஜரை கைய­ளித்­துள்­ளனர்.

அந்த மக­ஜரில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் உக்­கொட தம்­மிந்த தேரர் தெரி­விக்­கையில்,

அமைச்சர் சஜித் பிரே­ம­தாச வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கு­வ­தற்கு பிக்­குமார் முன்­னணி ஆசீர்­வாதம் வழங்­கு­கின்­றது.மக்கள் எதிர்­பார்க்­கின்ற அபி­வி­ருத்­தி­களை  அவர் நிறை­வேற்­றுவார் என்ற நம்­பிக்கை இருக்­கி­றது.

எவ்­வித இன மத பேதமும் இன்றி அனை­வ­ருக்கும் சமமான ஆட்சியை நடத்துவார் என்ற நம்பிக்கையும் காணப்படுகின்றது என்ற  பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.