கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களில் ஒருவர் இன்று (19) பிற்பகல் அப்பகுதியில் உள்ள மின்விளக்கு கம்பத்தின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், சம்பள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் மற்றும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் சத்தியாகிரக போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில் குறித்த போராட்டம் இன்று (19) 9 வது நாளாகத் தொடர்கிறது.
இதன்போது இன்று பிற்பகல் 1.30 மணியளவில், போரில் காலை இழந்த ஊனமுற்ற இராணுவ வீரர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலையத்தின் முன்னாளுள்ள ஒரு மின்விளக்கு கம்பத்தின் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்..
இதையடுத்து, தீயணைப்பு படையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மின்விளக்கு கம்பத்திலிருந்து கீழே கொண்டு வந்தனர்.