புகையிரத வீதியில் நித்திரையில் இருந்த நபர் புகையிரதத்தில் சிக்குண்டு பலி

188 0

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (19) நண்பகல் 12 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் புகையிர பாதையில் நித்திரை கொண்டு இருந்தவேளை, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்க என்ற புகையிரத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளதாகவும் உயிரிழந்த நபர் 50 வயதுடையவர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பத்தில் உயிர்ழந்தவரின் சடலத்தை புகையிரத வீதியினை சீர் செய்பவர்களின் ஊடாக வட்டவலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.