காணாமலாக்கப்பட்டவர்களிற்கான நினைவுத்தூபிகளை அமையுங்கள்- ஐநா குழு வேண்டுகோள்

189 0

இலங்கையில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூறுவதற்கான  நினைவுத்தூபிகளை அமைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் அதற்கான நிதியுதவியை வழங்கவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஐநா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமல்போனவர்கள் தொடர்பில் தேசிய உள்ளுர் நினைவுத்தூபிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தவேண்டும் அதற்கான நிதிஉதவிகளை வழங்கவேண்டும் என ஐநா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும்போது அவர்களை நினைவுகூறுவதற்கான நினைவுத்தூபிகளும் வாய்ப்புகளும் குறைந்தளவே உள்ளதாக ஐநா குழு கவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ள ஐநா குழு இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பான அனைத்து சம்பவங்கள் குறித்தும் உடனடி  விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

 

இந்த சூழமைவில் சாட்சியங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படுவது அவசியம் என தெரிவித்துள்ள ஐநா குழு கப்பம் பெறுவதற்காக பலவந்தமாக காணாமல் செய்யப்படுதல் இடம்பெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்தும்  கவலை வெளியிட்டுள்ளது.