நாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (10.09.2019) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக வத்தளை, மாபொல, சீதுவ, ஜா-எல, கட்டுநாயக்க, கம்பஹா ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதமாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் இடம்பெறும் திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.