ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும்- சம்பிக

218 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 07 ஆம் திகதி சனிக்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் சம்பிக ரணவக்க  தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 7 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

மக்கள் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் வேட்பாளர் விவகாரத்தில் இவ்வாறு இழுபறி நிலைமை தொடர்கின்றமை பல சிக்கல்களை ஏற்படுத்தும். விரைவில் தீர்வொன்று எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

7 ஆம் திகதி சனிக்கிழமை பிரதமர் தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன் போது ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து இறுதித் தீர்வினைப் பெற முயற்சிப்போம் என அவர் இதன்போது தெரிவித்தார்.