பாகிஸ்தான் – கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு!

343 0

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியில் உள்ள சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, கடத்தப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், பின்னர் இஸ்லாமியர் ஒருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்தாகவும் தகவல் வெளியானது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் கடும் வேதனை அடைந்தனர்.
தங்கள் வீட்டுப் பெண் விடுவிக்கப்பட்டு பத்திரமாக வீடு திரும்ப தங்களுக்கு உதவும்படி இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி அந்த கும்பல் தங்களை மிரட்டுவதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், பாகிஸ்தானில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக  8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.