மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

275 0

கம்பளை பகுதியில் வயலில் பாதுகாப்பு வேலி அமைக்க முற்பட்ட நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வன விலங்குகள் வயலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக மின்சார இணைப்புடைய வேலியை அமைக்க முற்பட்ட போதே குறித்த நபர்  இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரதொட்ட பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மின்சார தாக்குதலுக்கு இலக்கான  நபர் கவலைக்கிடமான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மில்லகஹாமுல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.