ஸ்ரீலங்கன், மிஹின் லங்கா விமான சேவை மோசடி அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி

311 0

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா விமான சேவை நிறுவனம் என்பவற்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை  சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2006 ஜனவரி மாதம் முதல் 2018 ஜனவரி வரையான காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், மிஹின் லங்கா தனியார் விமான சேவை நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையே இவ்வாறு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.