இன்டர்போல் செயலாளர் நாயகத்தை சந்தித்த ரணில்

261 0

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து சர்வதேச நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்டர் போல் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று பிரதமரின் தொடர் ஒத்துழைப்புக்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற பாதுகாப்பு திட்டங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக இன்டர்போல் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் யாகேன் ஸ்டொக் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச பொலிஸ் இன்டர்போல் நிறுவனத்தின் தூதுக்குழு இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.

இதன்போதே மேற்கண்டவாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.