இரு வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் களுத்துறை – தெம்புவன மற்றும் யக்கல – வீரகுல ஆகிய பகுதிகளிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவல்களுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்புக்கள் இடம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர். வீரகுல பகுதியின் இரு வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்க்பபட்ட சுற்றிவளைப்புக்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

