மீண்டும் டெங்கு எச்சரிக்கை!

186 0

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டெங்கு ஒழிப்பு பிரிவு, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

இதேவேளை, மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.