இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் (59), மாவனெல்லை முருதவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர், அடிப்படைவாதம் பற்றிய கல்வியைக் கற்றவர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.