சு.க.வின் தேசிய மாநாட்டிற்கு முன்னர் கூட்டணி விவகாரத்திற்கு தீர்வு -மஹிந்த

280 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டிற்கு முன்னர்  பரந்துப்பட்ட  கூட்டணி குறித்து  தீர்க்கமான தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின்  எண்ணிக்கையினை 30 ஆக மட்டுப்படுத்தும்  விடயத்திற்கும் முக்கியத்துவம் செலுத்தப்படுவதுடன் ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர், மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  ஆகியோரின்  சந்திப்பின் பெறுபேறு  சுதந்திர கட்சியின்  தேசிய  மாநாட்டில்  உத்தியோகப்பூர்வமாக  அறிவிக்கப்படும்  எனவும் தெரிவித்தார்

பரந்துப்பட்ட கூட்டணி குறித்து நாளைமறுதினம் இடம்பெறவுள்ள இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.