இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

318 0

srilanka-britain-flag-720x480இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போரினால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்கள் வழங்கப்படவுள்ளதாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெரரோன் கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த திட்டத்துக்காக பிரித்தானியாவின் ஆளும் கட்சியாக கொன்வவேட்டிவ் கட்சிக்கு நன்கொடைகள் தொடர்ந்தும் கிடைத்துவருகின்றன.

இந்தநிலையில் நன்கொடையாக கிடைத்த பணத்தில் எவ்வளவு தொகை இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று டெய்லி மெய்ல் பிரித்தானியாவின் வெளியுறவு செயலகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

எனினும் அந்தக்கேள்விக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்தக்கேள்வி, கொன்வவேட்டிவ் கட்சியின் பேச்சாளரிடம் கேட்கப்பட்டபோது கட்சிக்கு கிடைத்துவரும் நன்கொடைகள், வெளிப்படைத்தன்மையுடன் பேணப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.